தொல்காப்பியம் சுட்டும் தமிழர் பண்பாட்டுப் பதிவுகள் |
|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal Volume-2 Issue-2 Year of Publication : 2020 Authors : Dr.B.Periyaswamy
|
|
Citation:
MLA Style: Dr.B.Periyaswamy "Tamil Cultural Record of Tolkappiyam" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I2 (2020): 72-84.
APA Style: Dr.B.Periyaswamy, Tamil Cultural Record of Tolkappiyam, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i2),72-84.
|
சுருக்கம்:
ஒழுக்கம், கல்வி, வீரம், ஈகை, சான்றாண்மை முதலிய நற்பண்புகளிலிருந்து வழுவாது அவற்றோடு ஒட்டி ஒழுகும் சான்றோர்களாலேயே இவ்வுலகம் நிலைபெற்ற வாழ்கின்றது. இத்தகைய நற்பண்புகள் பலவற்றையும் பெற்றுத் திகழும் முன்னோர்கள் தாம் படைத்த இலக்கிய, இலக்கணங்களில் இப்பண்புகளைப் பதியச் செய்து எதிர்கால மக்களும் பண்புடன் வாழ வழி வகுத்துள்ளனர். அவ்வகையில் தொல்காப்பிய பொருளதிகாரத்தில் பல பண்பாட்டு நிகழ்வுகளைக் காணமுடிகிறது. அப்பண்பாட்டின் அடிப்படையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிப்பிடும் போது வழிபாட்டு முறைகளில் நடுகல் வழிபாடு, கொற்றவை வழிபாடு, வெறியாட்டு வழிபாடு, அணங்கு வழிபாடு இவற்றில் வெறியாட்டு வழிபாடு இன்றும் நடைமுறையில் காணப்படுகிறது. அவற்றைப் பில்லிசூனியம், குறிகள் கேட்பது என மாறுபட்ட நிகழ்வாக இன்றைய நிலையில் காணலாம். விழாக்களில் நெய்யணி, பெருமங்கலம் என்னும் நிகழ்வுகள் இன்றும் நடைமுறையில் உள்ளன. இதில் பெருமங்கலம் என்பது இன்று அனைவராலும் கொண்டாடும் பிறந்தநாள் விழாவாகத் திகழ்கிறது. தொல்காப்பியத்தை மேலும் ஆய்வு செய்து தமிழ்ப்பண்பாட்டு வளர்ச்சிக்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் பெரிதும் உறுதுணையாக அமையும் என்ற உறுதியாகக் கூறலாம்.
|
முக்கிய வார்த்தைகள்: தொல்காப்பியம், வாழ்வியல், மரபியல், அகத்திணையியல், புறத்திணையியல், பண்பாடு, நில பாகுபாடு, விழாக்கள், தொழில்.
|
துணைநூற்பட்டியல்:
[1] இளம்பூரணர்(உரை), தொல்காப்பியம் (பொருளதிகாரம்), கழக வெளியீடு, சென்னை.பதி.1967.
[2] பரிமேலழகர்(உரை), திருக்குறள், செவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. பதி.1975.
[3] நச்சினார்க்கினியர் (உரை), கலித்தொகை, கழக வெளியீடு, சென்னை. பதி.1978.
[4] குருநாதன் (ப.ஆ), புறநானூறு, வடிவேல் பதிப்பகம், தஞ்சாவூர்-4. பதி.2003.
[5] புலியூர்கேசிகன், நற்றிணை, உமா பதிப்பகம், சென்னை. பதி.2013.
[6] தமிழண்ணல் (உரை), குறுந்தொகை, முல்லை நிலையம், சென்னை. பதி.2002.
[7] வேங்கடசாமி நாட்டார். ந.மு. (உரை), கொன்றைவேந்தன், சாரதா பதிப்பகம், சென்னை. 2007.
[8] தற்காலத் தமிழ் அகராதி
[9] மாணிக்கவாசகன். ஞா (உ.ஆ),சிலப்பதிகாரம், உமா பதிப்பகம், சென்னை. பதி.2012.
|